Saturday 12 January 2013

NALADIYAR BASED STORY 15 சொர்க்கத்திலும் தண்டனை


Hi,

This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.

Sri.Vishal

சொர்க்கத்திலும் தண்டனை

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


வசந்த சேனன் என்கிற செல்வந்தர் ஒருவர் வளமுடன் வாழ்ந்து வந்தார்.  நிறைய அறங்கள் செய்தார். சில கோவில்களை கட்டுவித்தார், பல கோவில்களுக்கு பூஜைகள் நடக்க அறக்கட்டளைகள் ஏற்படுத்தினார். இது தவிர, தன்னை வந்து இரப்பார்க்கு இல்லையென்று கூறாமல் உதவி செய்து வந்தார்.

அவர் இருந்த ஊரில் ஏரிகளும், குளங்களும், ஆறும் இருந்தன. அதனால் பலதரப் பட்ட பறவைகளும் அந்த ஊருக்கு கோடைக்காலத்தில் வந்து சென்றன.
அதில் சில, பல அதிசயமான பறவைகளை வசந்த சேனன் பிடித்து தனது கூண்டில் வளர்த்து வந்தார். அவற்றுக்கு வேளை தவறாமல் தரமான தீனியை தர மறக்க மாட்டார். அவற்றின் மீது மிகுந்த ஆசை வைத்திருந்தார். தினமும் மாலை நேரத்தில் அவற்றுடன் பேசுவார். அவை போடும் ஒலியை ரசித்துக் கேட்பார்.
இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் இறந்து சொர்க்கத்திற்கு போனார். அங்கே அவருக்கு எல்லா போகமும் கிடைத்தது. ஆனாலும் அவரை ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சிறையில் அடைத்து வைத்தனர். அவருக்கு ஒரே குழப்பம்; எதற்காக தன்னை சிறையில் அடைக்கின்றனர் என்று புரிய வில்லை.
அங்கே இருந்த ஒரு அதிகாரியை காரணம் வினவினார். அவரும், “நீ பல தருமங்கள் செய்ததனால் இங்கே சொர்க்கத்திற்கு வந்துள்ளாய்; இருப்பினும் நீ பல பறவைகளை கூண்டிற்குள் அடைத்து, அவற்றின் சுதந்திரத்தை பறித்ததனால் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுகிறாய்” என்றார்.
தான் என்ன தவறு செய்தோம் என்று வசந்த சேனனுக்கு அப்பொழுது புரிந்தது.

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
  நாலடியார் – 122
பொருள்: வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள்

1 comment:

  1. Good Story.
    The moral is Donate as per need and not according to your wish.

    ReplyDelete