Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal
எப்படி முடிந்தது
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM
ஒரு பேருந்தில் சிலர் ஊர் ஊராக்
சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் வணிகர்கள், சிலர் அலுவலர்கள், சில
மாணவர்கள், ஒருவர் சாஸ்திரி என்று பலரும் இருந்தனர்.
ஒரு குக்கிராமத்தின் வழியாக
பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று பேருந்தில் கோளாறு ஏற்பட்டு
நின்று விட்டது. சுற்றுலா நிர்வாகி பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பழுதினை நீக்க
ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
அந்தக் கிராமத்தில், அந்தச்
சமயத்தில் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்தது. கிராம மக்கள் வழி முறைகளை சரியாக
பின்பற்றாமல் வழிபடுவதை பயணிகளில் ஒருவராக வந்த ஸாஸ்திரி கவனித்தார்.
எனவே, அந்த மக்களை அழைத்து, தான்
ஒரு ஸாஸ்திரி என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, எவ்வாறு கடவுளை வழிபட வேண்டும்
என்கிற முறையை கற்றுக் கொடுத்தார். இந்த வழிமுறைகளை
மாற்றிவிடாதீர்கள், தவறினால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அறிவுறை
கூறினார்.
சிறிது நேரத்தில், பேருந்து
பழுது நீக்கப்பட்டு புறப்பட்டது. அனைத்து பயணிகளும் பேருந்தில் அமர்ந்தனர்.
ஸாஸ்திரியும் சக பயணிகளுடன் அந்த கிராம வாசிகளின் அறியாமை பற்றியும், தனது
அறிவுடைமை பற்றியும் ஜம்பம் அடித்துக் கொண்டு வந்தார்.
சற்று நேரத்தில், பேருந்தின்
வெளியே ஏதோ ஆரவாரம் கேட்டது. அந்த கிராம மக்கள் பேருந்தை நோக்கி பறந்து வந்து
கொண்டிருந்தனர். அவர்கள் சாஸ்திரியை நோக்கி வந்தனர்.
சாஸ்திரிக்கு சற்று கிலி
பிடித்தது. வந்தவர்கள் அவரை வணங்கி, அவர் சொல்லிக் கொடுத்த வழிமுறையில் வரிசை
மறந்து விட்டது என்றும், எதற்குப் பின் எதை செய்ய வேண்டும் என்று தெரியவில்லை
என்றும், எனவே தயவு செய்து திரும்பவும் சொல்லித்தருமாறு கேட்டனர்.
சாஸ்திரியும், “அது சரி,
இப்பொழுது எவ்வாறு பறந்து வந்தீர்கள்?” என்று கேட்டார்.
அவர்களும், தங்களுக்கு தெரிந்த
வகையில், சாஸ்திரியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று தங்கள் கடவுளைக்
கும்பிட்டு வந்ததாக கூறினர் அப்பாவியாக.
உடனே சாஸ்திரி, “உங்களுக்கு தெரிந்த வகையிலேயே வணங்குங்கள், அதை விட எந்த
வழியும் சிறந்ததில்லை” என்றார்.
பக்தி என்பது எண்ணத்தில் உள்ளதே
தவிர வழிமுறையிலும், ஆடம்பரத்திலும் இல்லை.
ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்;
- பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி;
ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு. நாலடியார்
– 118