Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM
ஒரு ஊரில் சுந்தரம் என்கிற
பெரு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த
போதிலும் அவர் ஒரு அடாவடிப் பேர்வழி.
தனது வணிகத்தில், நிறைய தில்லுமுல்லுகள்
செய்வார். விற்பனைப் பொருட்களில் கலப்படம் செய்வது போன்ற மோசமான வேலைகளிலும்
ஈடுபடுவார். வாணிகம் என்றாலே, இந்த விஷயங்கள் இல்லாமல் செய்ய முடியாது; பிழை
இல்லாமல் பிழைப்பு இல்லை என்பது இவர் கருத்து.
உணவுப் பொருட்களில் கூட
கலப்படம் செய்வார். இது ஒன்றும் பாவம் கிடையாது, ஒருவேளை பாவம் ஏற்பட்டாலும்,
கடவுளுக்கு ஏதாவது பூஜை செய்து காணிக்கை கொடுத்தோ, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தோ
பாவத்தை கழித்து விடலாம் என்று சொல்வார்.
ஒருநாள் அரசாங்க
உணவுத்துறை அதிகாரிகள் வணிகர்களின் பொருட்களை சோதனை செய்து கொண்டு வந்தனர்.
அப்பொழுது கலப்படம் செய்யும் வணிகர்களோடு சுந்தரமும் மாட்டிக் கொண்டார். ஒரு வாரம்
கழித்து விசாரணைக்கு வரச் சொல்லியிருந்தனர்.
தானம், பூஜை போன்றவை
தன்னைக் காக்கும் என்று நம்பினார். அப்பொழுது, ஒரு திகம்பர முனியைச் சந்தித்தார்.
எந்த பூஜை இந்த சூழ்நிலைக்கு ஏற்றது என்று கேட்டார்.
அந்த முனியோ, எந்தக்
கடவுளும் இந்த மாதிரியான பழிகளுக்கு துணை போகாது. தவறு செய்ததை மனம் திருந்தி
கூறினால் தண்டனையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் நீயோ, தவறு செய்யவில்லை
என்று வாதம் செய்வதோடு, தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு பரிகாரமாக என்ன பூஜை
செய்யலாம் என்று யோசிக்கிறாய்.
மேலும், எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் பூஜையும், தானங்களும்தான் மதிப்பும்,
மரியாதையும் பெறுகின்றன. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை புரிந்து கொள்
என்றார்.
அவர் பேச்சில்
திருப்தியடையாத சுந்தரம், கோபமடைந்து அவரை திட்டிவிட்டு, வேறொரு கபட ஜோதிடரை
சந்தித்தார். அவரது ஏற்பாட்டின் படி பெரிய அளவில் அன்னதானம் நடத்தினார்.
அன்னதானத்தில் கலந்து
கொண்டு உணவு அருந்திய மக்கள் வாந்தி எடுத்ததால், மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்
பட்டனர். கலப்பட பொருளில் செய்யப்பட்ட உணவை
உண்டதால் இவ்வாறு ஆயிற்று என மருத்துவர் கூறினர்.
இதனால், சுந்தரம் கைது
செய்யப்பட்டார். அவரது கடை மூடப்பட்டது. சிறைக்குச் சென்ற பின் தான், பூஜை, புனஸ்காரத்தால்
பாவம் போகாது. நமது நடத்தைதான் நமக்கு நல்லதையும் கெட்டதையும் தருகிறது என்பதை
உணர்ந்தார்.
உறற்பால
நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல். நாலடியார் – 104
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல். நாலடியார் – 104
விளக்கம்: வந்து சேரும் தீமைகளை
முனிவர்களாலும் தடுக்க முடியாது. அவ்வாறே, நன்மைகளையும் யாராலும் நிறுத்த
முடியாது. மழை பெய்யாது ஒழிந்தால் அதை பெய்விப்பாரும் இல்லை. அதிகமாகப் பெய்தால்
அதை நிறுத்துவாரும் இல்லை.
அப்படியே
தீவினைப்பயன் நேரிட்ட போதும் நல்வினைப் பயன் நேரிட்ட போதும் தடுக்கும்
ஆற்றல் இல்லை! அவற்றின்
பயன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.
Hi,
ReplyDeleteThis is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal
Simple and effective writing. Story relates to modern times also.
ReplyDeleteYes. Thank you, Sir, for your comment about the Moral story.
Delete