Saturday 1 December 2012

NALADIYAR BASED MORAL STORY-10


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


ஒரு ஊரில் கருப்பையன் என்ற கணவான் வாழ்ந்தார். அந்த ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் அவருக்கு மிக்க செல்வாக்கு இருந்தது. அவர் சொல்வதை மக்கள் மதித்து நடப்பர்.
தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு, இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார்.
கோவிந்தன் என்ற நண்பர் அவருக்கு, “கண்டவர்களுக்கும் உதவி செய்யாதே” என்று அடிக்கடி அறிவுறைகள் கூறுவார்.
கருப்பையனோ, தருமம் தலை காக்கும், உதவி செய்வதை நிறுத்தக்கூடாது என்பார்.
ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும்; பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட வேண்டும். தகுதியில்லாத பேர்வழிகளுக்கு தருமம் செய்தால், தலையை வாங்கிவிடும்; எனவே எச்சரிக்கையாய் இரு  என்று அவர் நண்பர் தொடர்ந்து எச்சரித்தார்.
ஒருநாள் பக்கத்து ஊரிலிருந்து ஒரு நபர் தனது நண்பர் ஒருவரை அழைத்து வந்து, அவர் தொழில் நடத்துவதற்கு, வங்கியில் கடன் வாங்க வேண்டும்; அதற்கு வங்கி அதிகாரிக்கு ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்க வேண்டி கேட்டார்.


இவருக்கு அவரை யாரென்று தெரியாது, இருந்தாலும் அழைத்து வந்தவரை தெரியும் ஆதலால், கடன் கேட்டு விண்ணப்பித்தவரை தனக்கு பத்து வருடங்களாகத் தெரியும் என்றும் அவருக்கு கடன் கொடுக்கலாம் என்றும் கடிதம் கொடுத்தார். வங்கியின் மேலாளரும், இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே, மேலே எதுவும் பேசாமல் கடன் கொடுத்துவிட்டார்.
கடனை வாங்கிய நபர், அச்சு இயந்திரங்கள் வாங்கி அச்சகம் ஒன்றினை நடத்தினார்.  ஒருநாள், கள்ளப்பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டார் என்று அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எந்த வழிமுறையும் பின்பற்றாமல், எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல், வங்கியின் பணத்தை கடனாகக் கொடுத்ததற்காக வங்கி மேலாளரும் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரையும், அவரது தொழில் பற்றியும் தனக்கு நன்றாகத் தெரியும் என்று சான்றளித்த கருப்பையனையும் போலீசார் விசாரித்தனர். தனக்கு அவரை தெரியாது, ஆனால் அவருக்கு உதவி செய்யவே, சிபாரிசு கடிதம் கொடுத்தேன் என்று கருப்பையன் சொன்னதை போலீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகித்து அவரையும் கைது செய்தனர்.
அப்பொழுதுதான், “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று கோவிந்தன் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும். காலம் கடந்து வந்த ஞானம் ஆயிற்றே?.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்    நாலடியார் – 100

விளக்கம்: குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது 

No comments:

Post a Comment