Saturday 24 November 2012

NALADIYAR BASED MORAL STORY-9


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

சினமின்மை
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


நமது நாட்டின் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பல சத்யாக்ரகிகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.
சிறையைப் பார்வையிட ஒரு மேலதிகாரி அன்று வருவதாக இருந்தது. அவர் கண்டிப்பானவர் என்பதால் சிறை ஊழியர்கள் சற்று பரபரப்பாக இருந்தனர். மதிய நேரம், அந்த மேலதிகாரி வந்தார். கைதிகளை அவர் விசாரிக்கும் தோரணையிலிருந்தே, அவர் முரட்டுத்தனமானவர் என்பதும் புரிந்தது.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஒரு இடத்தில் அமர்ந்து ஏதோ வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்ததால், இந்த அதிகாரி வந்ததை கவனிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த ஆங்கிலேய அதிகாரி, தனது பூட் காலினால் அந்த வீரரை எட்டி உதைத்தார்.
கீழே விழுந்த வீரர் எழுந்து, “மன்னித்து விடுங்கள், தாங்கள் வருவதை நான் கவனிக்க வில்லை” என்றார். ஆனாலும், அந்த அதிகாரி ஆத்திரம் அடங்காமல் கன்னாபின்னாவென்று கத்திவிட்டு சென்றார்.
பிறகு, எல்லா வேலைகளும் வழக்கம் போல நடந்து கொண்டிருந்தன. ஆறு மாதங்கள் கழித்து, அதே அதிகாரி மறுபடியும் ஆய்வு செய்ய வரப்போகிறார் என்றதும் பரபரப்பு.
அதே சத்யாகிரகிகள் அந்த சிறையில் இருந்தனர். கைதிகளின் உணவின் தரத்தைக் குறையுங்கள், இவர்களுக்கு ஏன் உப்பிட்ட உணவு என்றெல்லாம் பொறுப்பற்ற வகையில் உத்தரவிட்டுக் கொண்டே வந்தார்.
ஒரு இடத்தில், ஒரு கைதி இவரைப் பார்த்து புன்னகைத்தார். அவரை இவருக்கு நினைவில்லை. “நீ யார், ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டார் அதிகாரி.“தங்களுக்கு ஒரு பரிசு வைத்துள்ளேன், நானே செய்த காலணி இது” என்றார்.
அந்த ஆங்கிலேய அதிகாரி விரும்பவில்லை யென்றாலும், வேண்டா வெறுப்பாய் வாங்கிப் பார்த்தார். கால் அளவு மிகச்சரியாக இருந்தது.
எனது அளவு எப்படி தெரியும் என்று ஆச்சரியத்தார் அதிகாரி.
“சென்றமுறை தாங்கள் இங்கு வந்திருந்த பொழுது, தங்களது பூட் காலால் என்னை உதைத்து தள்ளினீர்கள். அந்தத் தடம் எனது சட்டையில் நன்றாக பதிந்தது” என்றார்.
அந்த அளவைக் கொண்டுதான் இந்த காலணியை உருவாக்கினேன் என அமைதியாகக் கூறினார் அந்தக் கைதி.
அதைக் கேட்டு அந்தக் கடுமையான அதிகாரியின் மனமும் இளகியது. அது முதல் அவர் யாரிடமும் கடுஞ்சொற்கள் கூட கூறுவதில்லை.

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.              நாலடியார் - 61
விளக்கம்: தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு                                             நாலடியார் – 70
விளக்கம்: நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்

 கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ?.

1 comment:

  1. Hi,
    This is Sri.Vishal.
    I hope you may enjoy the story.
    The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
    In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
    Please read and appreciate us to encourage my effort.
    Thank you.
    Sri.Vishal

    ReplyDelete