STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM
த்யானம்
ஜிநசந்திரன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். கல்வி
கேள்விகளில் சிறந்தவர். ஆதிபகவனின் சிறந்த பக்தர்.
ஆதீஸ்வரர் ஆலயம் இருக்கும் தெருவில்தான் அவரது வீடும்
இருந்தது. தினமும் ஆலயம் செல்வார். வழிபடுவார். கோவிலை சுத்தமாக வைத்துக்
கொள்வார். கோவிலுக்கு வருபவர்களிடம் அன்பாக பழகுவார். அவர்களுக்கு ஏதேனும்
தேவையென்றால் முகம் சுழிக்காமல் உதவி செய்வார்.
அந்த நல்லவருக்கு, ஒரு மனக்குழப்பம். தன்னால் அமைதியாக
அமர்ந்து த்யானம் செய்ய முடியவில்லையே என்கிற கவலை.
ஒருநாள் மாலை ஜிநாலயத்திற்கு அருகில் ஓடும் ஆற்றின்
படித்துறை ஒன்றிற்கு சென்றார். அந்த மாலை நேரத்தில் எவரும் ஆற்றிற்கு வர
மாட்டார்கள் என நினைத்தார்.
அந்த இடம் அமைதியாக இருந்ததால், த்யானம் செய்ய ஏற்ற இடம்
என்று அவருக்கு தோன்றியது, அங்கேயே அமர்ந்து, “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார். அப்பொழுது, ஒரு பெண் அங்கே
குளிக்க வந்தாள்.
உடனே, ஜிநசந்திரன் கண்களை மூடிக்கொண்டு, “ஓம் ஜிநாய நம” என்று சொன்னார். அந்தப்
பெண் அருகே வருவது அவளது கொலுசின் ஓசையால் அறிய முடிந்தது.
அட என்னது இது? என்று நினைத்துக் கொண்டு, இரு
கைகளாலும் காதுகளை மூடிக்கொண்டார்.
அதற்குள் அவள் அருகாமையில் வந்து விட்டாள், அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை
வாசம் வந்தது.
இதனால் சலிப்படைந்த ஜிநசந்திரன், தனது தோளில் போட்டிருந்த
அங்க வஸ்திரத்தை (துண்டு) எடுத்து கண், காது, மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு
“ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக
சொன்னார்.
“அந்தப் பெண் போயிருப்பாளோ, எதுவும் அறிய
முடியவில்லையே” என்று நினைத்தார்.
புரிந்ததா! அவரால் ஏன் த்யானம் செய்ய
முடியவில்லை என்று.
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும். நாலடியார் – 59
This comment has been removed by the author.
ReplyDeleteHi,
ReplyDeleteThis is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal