21 வெளி நாட்டு மோகம்
STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN
நந்தன்
என்பவன் எப்பொழுதும் வெளிநாட்டு மோகம் கொண்டவன். வெளிநாட்டு சட்டை, காலணி,
கடிகாரம், தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசி என்று எது வாங்கினாலும்
வெளிநாட்டுப் பொருட்கள்தான் வாங்குவான்.
அவனுடைய
நண்பர்கள், அவற்றையெல்லாம் வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தினாலும் கேட்கமாட்டான்.
இந்தியத் தயாரிப்புகள் அற்பமானது என்று கூறுவான். வெளிநாட்டுத் தயாரிப்புகளைப்
பயன் படுத்தினால்தான் ஒரு மரியாதை, அவை வீட்டில் இருந்தாலே ஒரு தனி பெருமை என்று
கூறுவான்.
ஒருநாள்
சீனாவில் செய்யப்பட்ட நீர் சூடேற்றி (water heater) ஒன்றினை வாங்கி வந்தான். நண்பன்
ஒருவன், இதில் இந்தியத் தர முத்திரை இல்லை; அதனால் வாங்காதே என்றான். நந்தனோ, உனது
ISI எல்லாம் இந்தியாவுக்குத்தான், சீனாவுக்கு அல்ல என்று
நண்பனைத் தவிர்த்தான்.
நண்பனோ,
“அப்படி கூறாதே. ISI என்பது, தரம் மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும்
நீடித்த் உழைப்பு போன்றவற்றையும் சான்றளிக்கிறது. நீ வாங்கியுள்ளது தரம் குறைந்தது
மட்டுமல்ல, பாதுகாப்பற்றது” என்று கூறினான். இருந்தாலும்,
நந்தன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இரு
நாட்களில், நந்தன் சீனத் தயாரிப்பால், மின்சாரம் பாய்ந்து, குளியல் அறையிலேயே
இறந்து போனான்.
நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது. நாலடியார் 207
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது. நாலடியார் 207
பொருள்: நெஞ்சமே, கேள்! பகைவர் இல்லத்தில் வேளை தவறாமல்
பொரிக்கறியுடன் கூடிய உணவினை உதவியாகப் பெற்றாலும் அது, வேம்புக்கு
நிகராகும், உணவுக்குரிய நேரம்
கடந்தபோதும், சுற்றத்தாரிடமிருந்து
கீரை உணவே கிடைத்தாலும் அ·து இனிமையாகும்