Saturday 13 April 2013

Naladiyar Moral Story 28 புண்ணாக்குக்கு பூஜை


28 புண்ணாக்குக்கு பூஜை
 STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN 
இந்திரன், மகேந்திரன் என்று இரு நண்பர்கள். இந்திரன் கொடையாளி, மகேந்திரன் உலோபி.
இந்திரன் தன்னை அண்டியவர்களுக்கு தேவையான் பொருள் உதவியும், பண உதவியும் தந்துதவுவான். மகேந்திரனோ தன்னிடம் உள்ள பணத்தையெல்லாம் ஒரு மூட்டையில் கட்டி, அதற்கு தினமும் பூஜை செய்து வணங்குவான். அதனை ஒரு நாளும் அவிழ்க்க மாட்டான், யாருக்கும் தரவும் மாட்டான்.
ஒருநாள் அந்தப் பணமூட்டை திருடு போய் விட்டது. மகேந்திரனுக்கு மிகுந்த கவலையாகி விட்டது.. தன்னால் இனிமேல் அவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது, தனது வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணினான்.
அப்பொழுது இந்திரன், மகேந்திரனை கவலைப்பட வேண்டாமென்றும், உண்மையில் அவனது பணத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவனது மனைவி தன்னிடம் கொடுத்து வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு சொன்னார் என்றும் கூறினான்.
தான் அவ்வாறே செய்து, வந்த லாபத்தில் ஒரு பங்கினைத் தானமாக கொடுத்து, மீதமுள்ள பணத்தை தான் வைத்துள்ளதாகவும், அந்தப்பணம், முதலீடு செய்ததை விட அதிகமானது என்றும் கூறினான்.
மகேந்திரனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியென்றாலும், மறுபக்கம் குழப்பம். அப்படியென்றால், “நான் இதுவரை பூஜை செய்து வந்த மூட்டைக்குள் இருந்தது என்ன?” என்று கேட்டான்.
“அது வெறும் புண்ணாக்கு மூட்டை” என்றான் இந்திரன்



ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.            நாலடியார் 280
பொருள்: பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் அவ்வாறே மிகுந்த துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும் துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம். ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும்.
பொருள் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அறிந்து, அதனை இன்பத்திற்கு உரியதாகச்செய்தல் வேண்டும் என்பது கருத்து

3 comments:

  1. Nice Story.
    Beating the Superstitious beliefs and encouraging the donations.

    ReplyDelete
  2. ithu marronrirku ethirmaraiyanathu. enna seiyvathu?

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. நாலடியார் மிக அருமையான கருத்துக்களைச் சொல்லும் எளிய நான்கு அடிகளைக் கொண்ட சிறு நூல். தினம் ஒரு நாலடியார் வீதம் சிறுவர்கள் மனப்பாடம் செய்யலாம்.

    ReplyDelete