25
வென்றது யார்?
Story is based on moral advocated by Naladiyar
STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN
சௌதர்மேந்திரனும் கமடனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,
நன்றாகப் படிப்பவர்கள்.
பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வுகள்
நடைபெற்றுக் கொண்டிருந்தன. இருவரும் மிதி வண்டியில் பள்ளிக்கு சென்று
கொண்டிருந்தனர். அப்பொழுது, முரடன் ஒருவன் எதிரில் வந்து சௌதர்மேந்திரன் மீது
மோதிவிட்டான். அதனால், சௌதர்மேந்திரன் கீழே விழுந்து விட்டான்.
உடனே, கமடன் அந்த முரடனைப் பிடித்துக் கொண்டு
திட்டினான். சௌதர்மேந்திரனோ, “பரவாயில்லை, அவனை
விட்டுவிடு, நாம் பள்ளிக்கு செல்வோம்” என்றான். கமடனோ விடுவதாயில்லை. முரடன் மன்னிப்பு கேட்கும் வரை
விடுவதாயில்லை என்று அடம் பிடித்தான்.
சௌதர்மேந்திரனோ தேர்வு எழுதும் நேரம்
நெருங்குவதால், சண்டையை விடுத்து வருமாறு வற்புறுத்தினான். முரடனோ மன்னிப்பு
கேட்பதாயில்லை. கமடனோ விடுவதாயில்லை. “நீ வேண்டுமானால் பள்ளிக்கு செல், இவனை நான்
விட்டுவிட்டால் தோற்றவனாகி விடுவேன்” என்று கமடன் சொன்னான்.
சௌதர்மேந்திரனும் வேறு வழியின்றி பள்ளிக்கு
சென்றான்.
முரனும் சிறிது நேரம் கழித்து முரடன்
மன்னிப்பு கேட்டதால், வெற்றிக் களிப்புடன், கமடன் பள்ளிக்கு வந்தான். அங்கே நேரம்
கடந்துவிட்டதால் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை.
இப்பொழுது வென்றது யார்?
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். நாலடியார் 248
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான். நாலடியார் 248
நல்ல நிலையிலே தன்னை
நிறுத்திக்கொள்பவனும், அந்த நிலையைக்
கெடுத்துத் தன்னைத் தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட
மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்திக்கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே
ஆவான். (ஒருவனது உயர்வு தாழ்வு அவனது அறிவினாலேயே உண்டாகும் என்பது கருத்து). தீதும் நன்றும் பிறர்தர வாரா.
கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு. நாலடியார் 249
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு. நாலடியார் 249
அருமையாக ஒரே சீரான
முறைப்படி அலைகள் ஆரவாரம் செய்யும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு வேந்தனே!
சமுதாயத்திற்குப் பயன்தரத்தக்க ஒரு நல்ல காரியம் முறைப்படி இனிதே நிறைவேறும்
பொருட்டு, பெருமை யுடையோரும்
அறிவில்லார் பின் செல்வது அறியாமையன்று; அ·து அறிவுடைமையே! (கல்லாதாருடன் ஒரு நல்ல
காரியத்தின் காரணமாகக் கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).
Good and Nice story.
ReplyDeleteWhy some delay in publishing the story?
Why these stories are not published in magazines?
Sukumar.S
It is very nice story.
ReplyDeleteApplicable to now-a-days also.
Anandhan
nice story. nice tamil names used. selvakumaran
ReplyDelete