STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN
24 நட்பு
தாய் சிங்கம்
தன் குட்டியிடம், “நாம் சிங்கங்களுடன்தான் வாழ வேண்டும். பொழுது போக்குவதற்கோ,
விளையாடுவதற்கோ சற்று நேரம் தனக்கு பிடித்தவர்களிடம் சென்று நேரம் கழிப்பது
ஏற்புடையது” என்று எச்சரித்தது.
கழுதைக்கூட்டத்தில்
தனக்கு கிடக்கும் அந்தஸ்தே பெரியதாகப் பட்டதால், அங்கேயே குட்டி வாழ ஆரம்பித்தது.
ஒரு நாள்,
ஓநாய் ஒன்று கழுதைகளைத் துரத்தியது. கழுதைகள் பயந்து ஓடின, சிங்கக்குட்டிக்கு என்ன
செய்வதென்று புரியவில்லை. தானும் அவற்றுடனே ஓடியது.
கழுதைகள்
தங்களது உயிருக்கு ஆபத்து என்பதால் வேகமாக ஓடின. சிங்கக்குட்டிக்கோ எதற்காக
ஓடுகிறோம் என்பதும் தெரியவில்லை, தான் ஒரு சிங்கக்குட்டி என்பதும் புரியவில்லை.
அதனால் சரியாக ஓட முடியவில்லை.
சற்று
நேரத்தில், கழுதைகள் தப்பித்துக் கொண்டன. சிங்கக்குட்டி மாட்டிக்கொண்டது. முதலில்
ஓநாய் சிங்கக்குட்டியைப் பார்த்து பயந்தாலும், அதன் நிலைமையைப் பார்த்து என்ன
நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டது.
எனவே தனியாய்
நின்ற சிங்கக்குட்டியை கொன்று தின்றது.
நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று நாலடியார் 233
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று நாலடியார் 233
பொருள்: நுட்பமான அறிவினை உடையவர்களுடன் நட்புச் செய்து
அதன் பயனை அனுபவித்தல், விண்ணுலக
இன்பத்தினைப் போல மேன்மையுடையதாகும். நுட்பமான நூலறிவு அற்ற பயனில்லாதவருடன்
நட்புக் கொள்ளுதல் நரகங்கள் ஒன்றினுள் சேர்ந்திருத்தல் போல் துன்பம் தருவதாகும்
சிங்கக்குட்டிக்கோ எதற்காக ஓடுகிறோம் என்பதும் தெரியவில்லை, தான் ஒரு சிங்கக்குட்டி என்பதும் புரியவில்லை. அதனால் சரியாக ஓட முடியவில்லை.
ReplyDeleteWhat a fantastic wordings.
Nice Moral Story. Keep it up.
Thank you
Deleteசரியான
Deleteஅனைவருக்கும் பயனுள்ள அறநெறி. எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDelete