18 பக்தி
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM
18 பக்தி
சிரேணிகன் என்கிற குரு ஒருவர் இருந்தார், அவருக்கு பல பணக்கார சிஷ்யர்களும்,
பக்தர்களும் இருந்தனர். அவர்கள் இல்லங்களில் ஆடம்பரமான பூஜைகளை நடத்தி வைப்பார்.
எப்பொழுதும் பிஸியான சாஸ்திரியாகவே இருந்தார்.
அன்று தீபாவளிக்கு மறுநாள்,
லக்ஷ்மி பூஜையை பல பக்தர்கள் வீட்டில் அடுத்தடுத்து செய்வதாக ஏற்பாடு. ஒரு ஏழை
பக்தன், தனது வீட்டிலும் பூஜை செய்ய வருமாறு அன்புடன் அழைத்தான்.
குருவோ, “ஏழைக்கு எதற்கப்பா
ஆடம்பரமான லக்ஷ்மி பூஜை, நன்றாக நீராடி விட்டு ஓம், ஓம் என்றோ, நமோ நமோ என்றோ
சொல்லிக் கொண்டே லக்ஷ்மி பெயரையும் சொல்ல வேண்டியதுதானே” என்றார்.
அவர் இளக்காரமாக சொல்கிறார்
என்பது புரியாமல், அந்த ஏழையும் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு லக்ஷ்மி நமோ
என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நம்பிக்கையுடன்.
அன்று மாலை, ஒரு
பிச்சைக்காரக் கிழவி அந்த ஏழை வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டாள். ஏழை வீட்டில்,
ஒரேயொரு சீப்பு வாழைப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை; அந்த வாழைப் பழத்தினை
கொடுத்தார். அந்தக் கிழவி, லக்ஷ்மி தேவியாக உருமாறி பல வரங்களை ஏழைக்கு அருளினாள்,
ஏழை செல்வந்தரானார். தனக்கு வழி காட்டிய!? குருவிற்கு காணிக்கை கொடுக்க சென்றார்.
அப்பொழுதுதான் குருவிற்கு
புரிந்தது, “ஆடம்பரத்தில் இல்லை பக்தி, எளிமையிலும், நோக்கத்திலும்,
தூய்மையிலும்தான் தெய்வம் வாழ்கிறது” என்பது.
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு நாலடியார் 91
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு நாலடியார் 91
பொருள்: பொருள்
இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக்
கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல் நாலடியார் 172
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல் நாலடியார் 172
பொருள்: அறத்தின் நெறியை
அறியுங்கள்! எமனுக்கு அஞ்சுங்கள்! அறியார் கூறும் கடுஞ் சொல்லைப் பொறுத்துக்
கொள்ளுங்கள்! வஞ்சனைக் குணம் உங்களிடம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்! தீயோர்
நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பொ¢யோர் அறவுரைகளைக் கேளுங்கள்
No comments:
Post a Comment